2020ல் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து விவரம் வெளியானது

கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு எத்தனை சம்பளம் மற்றும் எத்தனை பங்குகள்   வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 21, 2019, 04:21 PM IST
2020ல் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து விவரம் வெளியானது title=

கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு எத்தனை சம்பளம் மற்றும் எத்தனை பங்குகள்   வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு (2020) சம்பளமாக 2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி) உள்பட பல்வேறு வழிகள் மூலம் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுந்தர் பிச்சை 2 மில்லியன் டாலர் சம்பளத்தை பெறுவார் என ஆல்பபெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் பங்கு உள்ளிட்டவற்றில் சுந்தர் பிச்சையின் பங்காக 240 மில்லியன் டாலர் (ரூ.1700 கோடி) வழங்கப்பட உள்ளது.

2004-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். இதுவே உலக அளவில் கூகுள் மிகவும் புகழ்பெற்ற இன்டர்நெட் பிரவுசராக மாற காரணமாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020-ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு வரையிலான பங்காக 90 மில்லியன் டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு டிசம்பர் 19-ஆம் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளது. 

Trending News