ATM மோசடியை எவ்வாறு தவிர்க்கலாம், சிறப்பு சேவையைத் தொடங்கிய SBI

ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது நடைபெறும் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சேவையை வழங்குகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 15, 2020, 07:26 PM IST
ATM மோசடியை எவ்வாறு தவிர்க்கலாம், சிறப்பு சேவையைத் தொடங்கிய SBI title=

SBI ATM OTP Service: நாம் அனைவரும் பிளாஸ்டிக் பணம், பணமில்லா பரிவர்த்தனை அல்லது டிஜிட்டல் சேவை (Digital India) ஆகியவற்றை நோக்கி நகர்கையில், ஏடிஎம் மோசடி அல்லது ஆன்லைன் மோசடியும் அதே வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஏடிஎம் கார்டுகளை ஹேக் செய்வது மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை சுத்தம் செய்வது போன்ற சம்பவங்கள் தினமும் வெளிவருகின்றன.

ஏடிஎம்களில் (ATM) இருந்து பணம் எடுக்கும்போது நடைபெறும் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சேவையை வழங்குகிறது. இந்த சேவையின் மூலம், குறிப்பாக இரவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பானது.

ALSO READ - தமிழகத்தில் ‘போலியாக’ SBI வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பல் கைது....!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா OTP (SBI OTP) அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் ஓடிபி (OTP) இல்லாமல் ஏடிஎம்களில் இருந்து ரூ .10,000 க்கும் மேல் பணத்தை எடுக்க முடியாது.

இதில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது ஹேக் செய்யப்பட்டால், ஹேக்கர்கள் உங்கள் கணக்கிலிருந்து OTP உதவியின்றி பணத்தை எடுக்க முடியாது.

ALSO READ - ALERT!! ATM விதியில் மாற்றம்; 8 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

எஸ்பிஐ ஏடிஎம் (Automated Teller Machine)
நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம்மில் (SBI ATM) மட்டுமே கிடைக்கும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இல்லை. இது தவிர, இந்த சேவை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இருக்கும்.

மோசடிக்கு தடை:
எஸ்பிஐயின் இந்த சேவையின் மூலம், ஏடிஎம் மோசடி வழக்குகளை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். இந்த சேவையின் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு (SBI Customers) இப்போது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி (OTP) தேவைப்படும்

ALSO READ - வெறும் 10 நிமிடத்தில் வீட்டுக்கடன்; SBI வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்...

பணத்தை எடுப்பது எப்படி?
நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர், உங்களிடம் எஸ்பிஐ ஏடிஎம் அட்டை உள்ளது. சில காரணங்களால் உங்களுக்கு இரவில் பணம் தேவைப்படுகிறது, எஸ்பிஐ ஏடிஎம் (Near ATM Machine) இயந்திரத்தில், நீங்கள் ஓடிபி சேவை மூலம் பணத்தை எடுக்கலாம்.

- எஸ்பிஐ ஏடிஎம் சாவடிக்குச் சென்று உங்கள் அட்டையைச் செருகவும்.
- பின் எண்ணை உள்ளிட்டு, நீங்கள் திரும்பப் பெற விரும்பும் பணத்தை உள்ளிடவும்.
- பணத்தை உள்ளிட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் தோன்றும்
- இந்த OTP எண்ணை ஏடிஎம்மில் உள்ளிடவும்.
-OTP சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட தொகை திரும்பப் பெறப்படும்.

ALSO READ - வங்கி விவரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்; எச்சரிக்கும் SBI வங்கி...

Trending News