‘என்னை அவரோட சேர்த்து வையுங்க’: கணவர் வீட்டு முன்பு மனைவி தர்ணா போராட்டம்

Wife Protest infront of Husband House in Cuddalore: கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 2, 2024, 04:14 PM IST
  • காதலித்த நபரை கரம் பிடித்த பெண்.
  • மனைவியிடம் சொல்லாமல் காணாமல் போன கணவன்.
  • தர்ணா போராட்டத்தில் மனைவி.
‘என்னை அவரோட சேர்த்து வையுங்க’: கணவர் வீட்டு முன்பு மனைவி தர்ணா போராட்டம் title=

Wife Protest infront of Husband House in Cuddalore: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (22). பிஏ பட்டதாரியான இவரும் அதே ஊரை சேர்ந்த தனாதிபதி மகன் அரிதாஸ்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அரிதாஸ் சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் உறவு கொண்டுள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சரண்யா தம்மை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அரிதாசை வற்புறுத்தியுள்ளார் ஆனால் அதற்கு சம்மதிக்காத அரிதாஸ், பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தியுள்ளார். 

ஆனால் திருமணத்திற்கு தொடர்ந்து சரண்யா வற்புறுத்தி வந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமடைந்திருந்த அவரை தொழுதூர் அடுத்த கழுதூரில் உள்ள மருந்து கடைக்கு அழைத்துச் சென்று சத்து மாத்திரை என பொய் கூறி கர்ப்பத்தை கலைப்பதற்கான மாத்திரையை கொடுத்துள்ளார். இதனால் சரண்யாவின் கர்ப்பம் கலைந்தது.

இதனையடுத்து சரண்யா திருமணத்திற்கு வற்புறுத்தி வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அரிதாஸ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் அரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததை அடுத்து, அரிதாசுக்கும் சரண்யாவுக்கும் கடந்த 11.07.2021 அன்று விருத்தாசலம் அடுத்த அருள்மிகு ஸ்ரீ கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் ஊர் தலைவர் மற்றும் ஊர் முக்கிய பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மேலும் சரண்யாவின் பெற்றோர் அரிதாஸிற்கு 5 பவுன் செயின் மற்றும் இரண்டு பவுன் மோதிரமும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி திருமணத்திற்காக ரூபாய் 5 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். வெளியூர் சென்ற கணவன் நீண்ட நாட்களாக திரும்பி வராதது குறித்து அரிதாசின் பெற்றோரிடம் சரண்யா கேட்டபோது கேட்டபோது, மாமனார் தனாதிபதியும் மாமியார் தமிழரசியும் அவரை தகாத வார்த்தையால் திட்டி தலைமுடியை இழுத்து தாக்கியுள்ளனர். மேலும் சரண்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.

மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்!

இதனையடுத்து கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ‘என்னை காதலித்து  கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து விட்டு தலைமறைவான அரிதாஸ் உடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். எனது கணவருடன் சேர்த்து வைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை’ என்று அவர் கூறினார். 

மேலும் தன்னை தாக்கிய மாமனார் தனாதிபதி மற்றும் மாமியார் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கணவன் வீட்டு முன்பு பெண் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் - டிடிவி தினகரன் பேச்சு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News