கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவி!

கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 02:48 PM IST
கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவி! title=

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்த்தவர் சேதுபதி(33). மாடுவெட் டும் வேலை செய்து வந் தார். இவரது மனைவி பிரியா(30), இவர்களுக்கு 7 வயது மற்றும் 10மாத பெண் குழந்தைகள் உள் ளனர். வேலை முடிந்து தினமும் குடித்துவிட்டு சேதுபதி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதனால், கணவன் -மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள் ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து பிரியாவும், இன்னொரு வாலிபரும் தண்ணீர் டிரம்பை வெளியே தூக்கிக் கொண்டு வந்தனர். அப்போது அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் அப்போது, தண்ணீர் டிரம்புக்குள் கணவர் உடல் இருப்பதாக பிரியா தெரிவித்துள்ளார்.

ALSO READ | கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பிரியாவை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து தகராறு செய்யும் கணவரை கடந்த வெள் ளிக்கிழமையன்று கல்லால் 'தாக்கி கொன்றதாகவும், உடலை தண்ணீர் டேங் குக்குள் அடைத்து வைத் ததாகவும் தெரிவித்துள்ளார் மேலும் துரதாற்றம் வெளியே வராமல் இருக்க தலையணை, போர்வையை வைத்து அடைத்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகஇச்சிப்பாளையம் முழு வதும் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்ட தால் உடலை வெளியே கொண்டு செல்ல முடியவில்லை என்றும் துர்நாற் றம் வீசியதால் வேறு வழி யின்றி வெளியே கொண்டு சென்றதாக தெரிவித்தார். 

couple

பின்னர் ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்த போலீசார் தண்ணீர்டிரம் புடன் உடலை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர் அதனை திறந்து பார்த்தால் தான் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டரா என்பது தெரியவரும். . இந்த நிலையில் விசாரணையை துவக்கி உள்ள காவல்துறையினர் பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது இந்த விஷயம் கணவருக்கு தெரிய வரவே அவர் அடிக்கடி பிரியாவை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதனை நிலையில் கணவரை கொன்று விட்டால் இருவரும் சந்தோசமாக வாழலாம் என்று முடிவு முடிவு செய்துள்ளனர் இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிற்குள்ளே கொன்று தண்ணீர் டேக்கருக்குள் அடைத்துவைத்து நாடகமாடியது தெரியவந்தது.  இதனையடுத்து கள்ளகாதலன் சதீஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சேலத்தில் ஒரே நாளில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை மற்றும் கணவன் கொலை போன்ற சம்பவங்களால் சேலம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | ஆதிபராசக்தியாக மாறிய கள்ளக் காதலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News