இன்று தமிழகத்தில் 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; குணமடைந்தவர்கள் 2,352 பேர்

இன்று 2,352 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,11,198 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 7, 2020, 06:30 PM IST
இன்று தமிழகத்தில் 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; குணமடைந்தவர்கள் 2,352 பேர் title=

சென்னை: தமிழகத்தில் இன்று 2,341 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 603 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,41,488 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,324 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் இன்று 2,352 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,11,198 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

ALSO READ |  சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

18,966 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 80,112 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 1,02,11,706* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்: 07-11-2020
கொரோனா பாதிப்பு - 2,341 
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 18,966 
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 80,112 
குணமடைந்து வெளியேறியவர்கள் -  2,352 
இறப்பு - 25

What is the status for covid-19 in Tamil nadu

Trending News