தமிழகத்தில் அடுத்த 24 மணி நேர மழை: வானிலை மையம்

Last Updated : Oct 1, 2017, 12:19 PM IST
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேர மழை: வானிலை மையம்  title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழைப்பொழிவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி காணப்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் 38% குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு தமிழகமெங்கும் மழை பரவலாக பெய்தது.

சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்துவாங்கியது.இன்று காலையும் சென்னையில் வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. தற்போது வெப்பச்சலனம் அம்ற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

Trending News