மதுக்கடைகள் திறக்கும் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

மதுக்கடைகள் திறக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Last Updated : Nov 14, 2017, 05:24 PM IST
மதுக்கடைகள் திறக்கும் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்! title=

மதுக்கடைகள் திறக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் விவகாரம் குறித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து திறந்துகொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் சுமார் 1700 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து தொடர்பட்ட வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழக அரசு சாலைகள் வகை மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, சாலை மாற்றம் செய்வது பற்றி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று வருவதாக, தமிழக அரசு கூறியது. இந்நிலையில் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன.

இதனையடுத்து இன்று, செவ்வாய்கிழமை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழக அரசு வழக்கறிஞரை திடீரென அழைத்து சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறப்பது பற்றி உயர்நீதிமன்றம் தான் விளக்கம் பெற்றுவருமாறு கூறியதாக, உச்சநீதிமன்றத்தில் கூறியது ஏன் என கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும் என்பது தங்களுக்கு தெரியாதா? என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிகழ்வு, தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக உள்ளது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்தது!

Trending News