மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!

மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது! 

Last Updated : Nov 30, 2018, 12:26 PM IST
மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்! title=

மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது! 

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

இதற்கு தமிழகத்தில் இருந்து கடுமையாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

அந்த மனுவில் கடந்த 22 ஆம் தேதி கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர் விஹாரி நிகம் என்ற பெயரில் இந்த அணையின் பணிகள் நடக்கும் என்று கர்நாடக அரசு வரைவு அறிக்கையில் தெரிவித்திருப்பது குறித்து தமிழக அரசின் மனுவில் உள்ளது. 

மத்திய நீர் வள ஆணையம் கர்நாடக அரசுக்கு கொடுத்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என்றும் அணை குறித்து எந்த ஒப்புதலும் வழங்க கூடாது என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மனுவின் நகல் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

 

Trending News