TN COVID-19 Update: ஒரே நாளில் 12,772 பேர் பாதிப்பு, 254 பேர் உயிர் இழப்பு

திங்களன்று தமிழ்நாட்டில் 12,772 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 09:00 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 12,772 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 254 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
  • இன்று 25,561 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
TN COVID-19 Update: ஒரே நாளில் 12,772 பேர் பாதிப்பு, 254 பேர் உயிர் இழப்பு  title=

சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டு இருக்கிறது. 

திங்களன்று தமிழ்நாட்டில் 12,772 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 254 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 29,801 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 146 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 108 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 29,801-ஐ எட்டியுள்ளது.

ALSO READ: COVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்

தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா நோய்த்தொற்றின் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,36,884 ஆக உள்ளது. 

தமிழகத்தில் இன்று 25,561 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,99,808 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,70,256 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 15,759 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7,245 ஆண்களும் 5,527 பெண்களும் அடங்குவர். 

ALSO READ: TN Lockdown: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்; என்னென்ன அனுமதி

இது தவிர தவிர அரியலூரில் 82 பேரும், செங்கல்பட்டில் 522, சென்னையில் 828, கோயம்பத்தூறில் 1728, கடலூரில் 283, தர்மபுரியில் 167, திண்டுக்கல்லில் 147, ஈரொட்டில் 1295, கள்ளக்குறிச்சியில் 145, காஞ்சிபுரத்தில் 145, கன்னியாகுமரியில் 364, கரூரில் 129, கிருஷ்ணகிரியில் 242, மதுரையில் 219, நாகப்பட்டினத்தில் 285, நாமக்கல்லில் 313, நீலகிரியில் 380, பெரம்பலூரில் 52, புதுக்கோட்டையில் 89, ராமநாதபுரத்தில் 95, ராணிப்பேட்டையில் 293, சேலத்தில் 796, சிவகங்கையில் 88, தென்காசியில் 126,  தஞ்சாவுரில் 596, தேனியில் 171, திருப்பத்தூரில் 196, திருவள்ளூரில் 329, திருவண்ணாமலையில் 252, திருவாரூரில் 193, தூத்துக்குடியில் 250, திருநெல்வேலியில் 134, திருப்பூரில் 781, திருச்சியில் 378, வேலூரில் 153, விழுப்புரத்தில் 263, விருதுநகரில் 198 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த 23 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 13,000-க்கும் கீழ் வந்துள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு (Lockdown) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கில் தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் மேலும் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

ALSO READ: Tamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News