ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு!! இன்று 3700 பேருக்கு தொற்று; இறப்பு 68

தமிழகத்தில் இன்று 3,713 புதிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 68 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 27, 2020, 07:11 PM IST
ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு!! இன்று 3700 பேருக்கு தொற்று; இறப்பு 68 title=

சென்னை: தமிழகத்தில் இன்று 3,713 புதிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 68 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,025 ஆகவும் உள்ளது. செயலில் உள்ள தொற்று பாதிப்பு எண்ணிக்கை 33,213 என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இந்த நேர்மறையான தொற்று மேலும் உயரக்கூடும், ஏனெனில் அதன் இரண்டு முக்கிய நகரங்களான மும்பை மற்றும் புனே, விரைவான ஆன்டிஜென் சோதனைகளை பயன்படுத்தத் தொடங்குகின்றன. அரை மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கும் இந்த புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கருவிகளுடன் தலா ஒரு லட்சம் மாதிரிகளையாவது சோதிக்க இரு நகரங்களும் திட்டமிட்டுள்ளன.

டெல்லி மிகவும் ஒரே நாளில் ஏற்படும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இது ஏற்கனவே ஆன்டிஜென் சோதனைகளைப் பயன்படுத்தி வருகிறது, மேலும் அதன் சோதனை திறன்களை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் மும்பையை விட டெல்லியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் கூட, சோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, இப்போது சோதனைகள் மிக விரைவான வேகத்தில் உள்ளது. உதாரணமாக, வெள்ளிக்கிழமை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முந்தைய 24 மணி நேரத்தில் 2.2 லட்சம் சோதனைகளை அறிவித்தது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தினசரி சோதனை எண்கள் 1.8 முதல் 1.9 லட்சம் வரை இருந்தன. இருப்பினும், இதன் விளைவாக தேசிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக அளவில் சோதனை மேற்கொண்டால், அதிக பாதிப்பு வெளியாகும். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Trending News