அடுத்தடுத்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் - யார் மீது தவறு ?

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 32க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 3, 2022, 07:10 PM IST
  • அடுத்தடுத்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்
  • கடந்த இரு வாரங்களில் 32க்கும் மேற்பட்டவர்கள் கைது
  • இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை நியாயமா ?
அடுத்தடுத்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் - யார் மீது தவறு ? title=

நேற்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், சுற்றி வளைத்துள்ளனர். அப்பகுதிகளில் மீன் பிடிக்கக்கூடாது என்று ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எச்சரித்து விரட்டியடித்துள்ளனர். அப்போது அச்சத்தில் சிதறி ஓடிய படகுகளில் இருந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Fishermen

முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள் வசம்  ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, கடந்த 29 ந்தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள்  ஒரு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கடந்த கடந்த மார்ச் 23ந்தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 ராமேஸ்வரம் மீனவர்களும் இலங்கை சிறையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டூழியம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தங்கையின் காதலனுக்கு கத்திக்குத்து - அண்ணன் கைது..!

Fishermen

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

மேலும் படிக்க | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News