தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி

Last Updated : Sep 12, 2017, 10:26 AM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி title=

கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி 12 பேரை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் கடற்பகுதியில் நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையின மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இரண்டு படகுகளையும், அதில் பயணம் செய்த 12 பேரையும் சிறைபிடித்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

Trending News