தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது

தாயாரை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 25, 2022, 03:16 PM IST
  • 74 வயதான தாயாரை தனிமையில் தவிக்கவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற மகன்
  • சென்னை விமான நிலையத்தில் மகன் கைது
தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது title=

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள். இவருக்கு வயது 74 ஆகும். இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் எனது கணவர் குப்புசாமி கடந்த மாதம் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார். மூத்த மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இவர் தனது தந்தை இறப்புக்கு கூட வரவில்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து சடங்கிற்கு தான் வந்தான். 

சடங்கு முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளான். எனக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தனிமையில் தவிக்க விட்டுள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவரின் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு

இதற்கிடையில் தன் மீது புகார் அளித்த தகவல் ராமகிருஷ்ணனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தனது வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மூத்த குடிமக்கள் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் துர்காம்பாள் அளித்த புகார் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீசும் அனுப்பி இருந்தனர். 

மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் - உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதற்காக கடந்த 22 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவரது பெயரில் மயிலாப்பூர் போலீசார் 'லூக் அவுட்' இருப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் விமான நிலையம் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகம் எங்களின் புனிதத் தலம் : அதைக் காலால் மிதிக்கலாமா ? - சி.வி.சண்முகம் ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News