போதை ஊசியால் பறிபோன இளைஞர் உயிர்... சென்னையை உலுக்கிய சம்பவம்!

Chennai Latest: டைக்னோபின் என்ற கொடிய போதைப் பொருளை செலுத்திக் கொண்ட சென்னை இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2023, 04:33 PM IST
  • அவருக்கு வயது 23.
  • போதைப் பழக்கத்திற்கு அவர் அடிமையாக இருந்துள்ளார்.
  • போதை மறுவாழ்வு மையத்திலும் அவர் இருந்துள்ளார்.
போதை ஊசியால் பறிபோன இளைஞர் உயிர்... சென்னையை உலுக்கிய சம்பவம்! title=

Chennai Latest: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாரும் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இந்த சூழலில் போதை ஊசியால் இளைஞர் ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது. 

சென்னை புளியந்தோப்பு கனகராய தோட்டம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சதீஷ். இவர் தனது அம்மா வேலாவுடன் வசித்து வந்தார். மேலும் சதீஷ் கடந்த இரண்டு வருடங்களாக போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். அவரை போதைப்பழக்கத்தில் இருந்து எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என அவரது தாய் பல முயற்சிகளை எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக செங்குன்றத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில்  சதீஷை சேர்த்துள்ளனர். அங்கு அவர் மூன்று மாதங்களாக சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

டைக்னோபின்

வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் போதைப் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இந்த முறை டைக்னோபின் என்னும் கொடிய போதைப்பொருளை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் தான் நேற்று காலை சதீஷ் தனது வீட்டில் சுயநினைவின்றி மயக்கத்தில் இருந்ததை கண்ட அவரது அத்தை அவரை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிச்சென்றுள்ளார். ஆனால் சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அவரை பறிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கழுத்தில் செலுத்திய போதை ஊசி

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சதீஷ் டைக்னோபின் எனும் போதை மருந்துகளை அவ்வப்போது பயன்படுத்தி வந்ததாகவும், நேற்று அதிக அளவில் போதை மருந்தை எடுத்து ஊசி மூலம் நேரடியாக கழுத்தில் செலுத்திக் கொண்டுள்ளார். அதனால் சோடியம் அளவு அவரது உடலில் உயர்ந்துள்ளது. அதுவே அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சதீஷ் உயிரிழந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பழக்கத்தால் சதீஷை போன்று பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கும் சூழல் உள்ளதால், காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் படிக்க | 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு... முழு அட்டவணை இதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News