Viral Video: ரூ.2000 நோட்டு கொடுத்தது குற்றமா? பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர்

Viral Video: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ரூ. 2000 நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி-  பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 7, 2023, 02:27 PM IST
  • 2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது -இந்திய ரிசர்வ் வங்கி.
  • செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் -ஆர்பிஐ
  • இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சு எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்.
Viral Video: ரூ.2000 நோட்டு கொடுத்தது குற்றமா? பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர் title=

தமிழ்நாடு வைரல் செய்திகள்: 2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்பதால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே  செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது இருசச்கர வாகனத்தில் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று 2 ஆயிரம்  ரூபாயை காட்டி, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் எனக்கூறியுள்ளார். ஊழியரும் பெட்ரோல் நிரப்பி விட்டு 2 ஆயிரம் ரூபாய்த் தாளை வாங்கி பெட்ரோல் பங்கு சூப்பர்வைசரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். 

மேலும் படிக்க - கை, கால், தொடை, இடுப்பு... பெண்ணை கவ்விய புலி: அரண்ட பெண், வைரல் வீடியோ

அதற்கு பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக்கூடாது எனக்கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் தாருங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பேட்ரோல் நிரப்பியவர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் பெண் சூப்பர்வைசர் அறிவுறுத்தலின் படி, பெட்ரோல் பங்க் ஊழியர் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுக்கும் உறிஞ்சு குழாயை எடுத்து வந்து பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சு எடுத்துவிட்டார். பெட்ரோல் பங்க் ஊழியரின் இந்த செயலை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அங்கு இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க - அம்மாடி.. செம கடி!! பார்த்தா கதிகலங்கி போய்டுவீங்க.. ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News