இபிஎஸ் Vs ஓபிஎஸ்... எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு தடுமாற்றம் - உருகும் சீமான்

எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு தடுமாற்றமாக இருக்கிறதென்று சீமான் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 27, 2022, 01:23 PM IST
  • ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூடுகிறது
  • இபிஎஸ் ஓபிஎஸ் விவகாரம் குறித்து சீமான் வருத்தம்
இபிஎஸ் Vs ஓபிஎஸ்... எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு தடுமாற்றம் - உருகும் சீமான் title=

அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழனிசாமியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லி சென்றார். அங்கு மோடியிடமும், அமித்ஷாவிடமும் அதிமுக விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் அங்கு அவருக்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்காததால் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லாததால்தான் நீதி கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ஓபிஎஸ் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

 

சூழல் இப்படி இருக்க இன்று அதிமுகவின் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைத் தவிர்த்து அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம்

அந்தச் சமயத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படம் போட்ட பேனர் சிலரால் கிழிக்கப்பட்டது. இதனால் தலைமை அலுவலகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

Palanisamy

இதனால் ஓபிஎஸ்ஸின் ஆதிக்கம் முழுவதுமாக அதிமுகவில் அழிந்துவிட்டது என்றே பார்க்கப்படுகிறது. ஜூலை 11ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் இபிஎஸ் நிரந்தர பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் படிக்க | அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்... தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “யார் பக்கம் நிற்கிறது என்று தெரியாத பி்ள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம். இரண்டு பேருமே என் இனம் சார்ந்தவர்கள். என்னைப் போன்ற பிள்ளைகளுக்கு ரொம்ப தடுமாற்றமாக இருக்கிறது. அவர்களுக்குள் பேசி இதனை சரி செய்ய வேண்டும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News