அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை: EPS - OPS

முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் மேற்கொண்ட தில்லி பயணம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2021, 02:26 PM IST
  • இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரிக்கை.
  • அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கு அதிருப்தி இல்லை
  • சட்ட பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்தோம்
அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை: EPS - OPS  title=

அஇஅதிமுக (AIADMK) கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (O.Panner Selvam), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆகிய இருவரும் தில்லியில்  பிரதமர் மோடியை சந்தித்தனர். 

பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்,  சந்திப்பு குறித்த தகவல்களை வெளியிட்டனர்.

பிரதமருடானான சந்திப்பில் டெல்டா பகுதி மக்களை பாதிக்கும் வகையிலான மேகதாது அணைகட்டு திட்டதை அனுமதிக்கக்  கூடாது எனவும் அதனால் அப்பகுதி பாலைவனமாக மாறும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டனர். நீர் மேலும், பற்றாக்குறைய தீர்க்க கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியதாகவும் இருவரும் கூறினர்.

மேலும், இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தோம் என இருவரும் தெரிவித்தனர். அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கு அதிருப்தி இல்லை eனவும் இருவரும் உறுதிபடக் கூறினர். சட்ட பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்கு pஇரதமர் மோடியிடம் நன்றி தெரிவித்தாகவும் இருவரும் குறிப்பிட்டனர். 

இதில், சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த  எடப்படி பழனிச்சாமி நன்றி என விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். 

சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் (Cabinet Expansion)  ஓ.பன்னீர் செல்வத்தின் (OPS) மகனும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன, ரவீந்திரநாத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி

இது தவிர சமீப காலங்களில் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பலர் திமுகவில் (DMK) இணைந்துள்ளது, உட்கட்சி பூசல் குறித்த செய்திகள், சசிகலா தொடர்பாக வரும் பரபரப்பு செய்திகள், அமமுகவை கலைத்துவிட்டு சசிகலா அதிமுகவுடன் இணைய போகிறார் என்ற போன்ற செய்திகள் ஆகியவை காரணமாக, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் மேற்கொண்ட தில்லி பயணம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, நேற்று தில்லி சென்றடைந்த ஓ.பன்னீர் செல்வம், பாஜகவின் மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நேற்று காலை ஓபிஸ் மேற்கொண்ட திடீர் பயணத்தை அடுத்து. இபிஎஸ் (EPS) இரவு தில்லி புறப்பட்டு சென்றார்.  

ALSO READ | ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News