மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!

ஆன்லைனில் ஆடர் செய்து மரம் அறுக்கும் இயந்திரம் வாங்கிய ஐடி ஊழியர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார். 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 28, 2022, 03:57 PM IST
  • மனைவி, பிள்ளைகள் கழுத்தறுத்து கொலை
  • இரத்த காடான வீடு - அதிர்ச்சியில் பல்லாவரம்
  • கடன் தொல்லையா ? - தீவிர விசாரணை
மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்! title=

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், 13 வயதில் நித்திய ஸ்ரீ என்ற மகளும், 8 வயதில் ஹரிஹரன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில், பிரகாஷ்-காயத்திரியின் திருமணம் நாளான நேற்று கொண்டாட்டத்தில் முடிய வேண்டியது ஆனால், பெரும் சோகத்தில் முடிந்தது. 

பிரகாஷின் திருமண நாளன்று அவரது தந்தை செல்போனில் தொடர்பு கொள்ள யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் விடிந்ததும் அவரின் வீட்டுக்கு சென்று பார்க்க அதிர்ந்து போயிருக்கிறார். பிரகாஷ், காயத்திரி, பிள்ளைகள் என அனைவரும் வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.

Pallavaram murder,Pallavaram family murder,பல்லாவரம் கொலை, பல்லாவரம், மரம் அறுக்கும் இயந்திரம்,crime

பதறிப்போனவர் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். தகவலறிந்து பிரகாஷின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். வீட்டில் கிடந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Pallavaram murder,Pallavaram family murder,பல்லாவரம் கொலை, பல்லாவரம், மரம் அறுக்கும் இயந்திரம்,crime

அதன்பின்னர், வீட்டில் ஏதேனும் தடையங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்ட காவல்துறையினருக்கு பிரகாஷ் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.அதில் ‘இந்த முடிவு குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு’என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரமும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாரா ; இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, முதற்கட்ட விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தற்கொலை செய்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்ட பிரகாஷ், அதற்காக ஆன்லைனில் மரம் அறுக்கும் இயந்திரத்தை ஆடர் செய்து வாங்கியிருக்கிறார்.

Pallavaram murder,Pallavaram family murder,பல்லாவரம் கொலை, பல்லாவரம், மரம் அறுக்கும் இயந்திரம்,crime

இந்நிலையில்தான், திருமண நாளில் மனைவி, பிள்ளைகள் மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். கண் முன்னே மனைவி, பிள்ளைகள் மூன்று பேரின் உயிர்பிரிவதை பார்க்கும் மன தைரியம் கொண்டவர் தானும் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் மனைவி, பிள்ளைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டுகிறது.

மேலும் படிக்க | தாகத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் ஆடர் செய்து மரம் அறுக்கும் இயந்திரம் வாங்கிய நபர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News