வரும் நவம்பர் 13 தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் நவம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Last Updated : Oct 27, 2018, 12:01 PM IST
வரும் நவம்பர் 13 தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை! title=

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் நவம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் நவம்பர் 13ம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் கூட்டம் அலைமோதும். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். 

இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் வரும் நவம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.

Trending News