மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!

பல்லடத்தில் மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 16, 2022, 12:33 PM IST
  • பணத்திற்காக ஏ.டி.எம்-ஐ உடைத்த நபர்.
  • மது போதையில் செய்த அட்டகாசம்.
  • காவல்துறை கைது செய்து விசாரணை.
மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி! title=

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு எதிரே தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் ஒரு பகுதியில் ஏ.டி.எம் செண்டர் செயல் பட்டு வருகிறது. ஏ.டி.எம் மையத்திற்கு நேற்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் ஏ.டி.எம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இயந்திரத்தில் பணம் வைத்திருந்த பெட்டியை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கை விட்டு திரும்பி சென்றதும் தெரிய வந்தது. மேலும் வங்கி மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைபற்றியும் விசாரணை நடத்தினர். விசாரணையில் மன்னார்குடியை சேர்ந்த நாகேந்திரன்(66) என்பவர் கடந்த சில வருடங்களாக பல்லடத்தில் தங்கி இருந்து கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. 

மேலும் படிக்க | கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

இன்னிலையில் மதுபோதையில் பேருந்து நிலையம் அருகே மயங்கி கிடந்த அவரிடம் இருந்த 170 ரூபாய் பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அவர் எழுந்து பார்த்த போது பணம் இல்லாதது தெரிய வந்துள்ளது. மது வாங்க வைத்திருந்த பணம் இல்லாததால் குடிபோதையில் இருந்த அவர் ஏ.டி.எம் மையத்திற்கு வந்து செங்கல்லால் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். இயந்திரத்தை உடைத்த நிலையில் பணம் வைத்திருந்த பெட்டியை உடைக்க முடியாததால் திரும்பி சென்றுள்ளார். கண்கணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்  போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர்.

மேலும் படிக்க | யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News