Suicide: லவ் பண்ணா தப்பா? புதுமண தம்பதி தற்கொலை! குடும்ப வன்முறை?

நாங்க லவ் பண்ணது தான் தப்பு'... கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமண தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சோகம்...

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2022, 09:43 AM IST
  • புதுமணத் தம்பதிகள் தற்கொலை
  • பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் துணிகர முடிவு
  • கடிதம் எழுதிவிட்டு உயிர் துறந்த காதல் தம்பதிகள்
Suicide: லவ் பண்ணா தப்பா? புதுமண தம்பதி தற்கொலை! குடும்ப வன்முறை? title=

நாங்க லவ் பண்ணது தான் தப்பு'... கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமண தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சோகம்...

சரண் என்ற இளைஞனும் வினிதா என்ற இளம் பெண்ணும் திருமணம் செய்துக் கொண்ட சில நாட்களிலேயே கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருப்பதி - சந்தியா தம்பதிகளின் மகன் சரண். இவர்கள் திருப்பூர் வீரபாண்டி, பகுதியில் வசித்து வருகின்றனர். சரண், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டி ஃபார்ம்  முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

சரண் தனது உறவிரான புதுக்கோட்டையை சேர்ந்த வினிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். வினிதாவும் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

காதலர்கள் ருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு,  திருப்பூரிலேயே யாருக்கும் தெரியாமல் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். 

ALSO READ | திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் சோதனை

இதனிடையே சரண் சமூகவலைத்தளத்தில் தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக பதிவிட்டதைப் பார்த்த சரணின் சகோதரி இருவரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். 

இருவரும் சரணின் வீட்டிற்கு சென்ற போது வினிதாவின் தந்தை வீரமுத்து, தனது மகளை காணவில்லை என கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக சரணின் குடும்பத்தினரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

படிக்கும் வயதில் எதற்கு திருமணம்? படித்து முடியுங்கள் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி வருத்தப்பட்ட சரணின் தந்தை, போலீசாரின் விசாரணைக்காக புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். 

SUICIDE

தங்களால் குடும்பத்தினருக்கு பிரச்சினை வருவதாக எண்ணிய சரண், வினிதா இருவரும், தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

வேலைக்கு சென்று திரும்பிய சரணின் அம்மாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், காதல் தம்பதியினரின் உடல்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டை சோதனை செய்தபோது சரண் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் "நாங்க லவ் பன்னது தான் தப்பு. எங்களால தான் இவ்வளவு பிரச்சினை, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. வினிதாவின் உடலையாவது அவங்க வீட்டுல கொடுத்துடுங்க"என எழுதி வைத்து உள்ளனர். 

இதனையடுத்து போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News