நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 3, 2024, 03:24 PM IST
  • தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
  • கோவை மக்களவை தொகுதிக்கு 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள்.
  • தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் title=

2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது முடிந்ததை தொடர்ந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 140 கோடி இந்திய மக்களின் எதிர்காலத்தை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும். நாளை காலை சரியாக 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை, அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையும் வரை தொடரும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்குப் பிறகே வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 

மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இதனை முன்னிட்டு அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர்க்கு எந்த ஒரு கட்சியினரும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனதால் தடுப்புகள் அமைப்பதற்கு பேரிகேட் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

கோவை மக்களவை தொகுதிக்கு 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களும் 123 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும் 127 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதே சமயம் கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இறுதி நாள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இங்கு வந்த மாவட்ட ஆட்சியர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார், மற்றும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினர்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களும் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையபக்கமான results.eci.gov.in என்ற பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். இந்தியா முழுவதும் நிலவரம், மாநில வாரியாக நிலவரம், தொகுதிவாரியாக நிலவரம் என தனித்தனியாக இந்த இணையப் பக்கத்தில் இருக்கும். ஒருவேளை உங்கள் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னிலை நிலவரம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் results.eci.gov.in என்ற பக்கத்துக்குசென்று மாநிலம் மற்றும் தொகுதி பெயரை தேர்வு செய்து, அதனுடைய அதிகாரப்பூர்வ நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். 

வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் அப்டேட்கள் மட்டுமே நம்பகமானவை, இறுதியானவை என்பதை கவனத்தில் கொள்க. 

மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News