பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Latest News Koyambedu Teacher Harassment : கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண் ஆசிரியரை பலாத்காரம் செய்த நபர் கைது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 9, 2024, 11:37 AM IST
  • ஆசிரியரை பலாத்காரம் செய்த கொடூரன்
  • தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
  • என்ன நடந்தது?
பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! title=

Latest News Koyambedu Teacher Harassment : கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய பெண் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று விடுவதால் வீட்டில் மகள்களுடன் இரவில் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதையில் மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அருகிலேயே இரண்டு பெண் பிள்ளைகள் படுத்திருந்ததால் அந்த நபர் மகள்களை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்து சத்தம் போட முயன்றிருக்கிறார்.

மேலும் படிக்க | கரூரில் கடும் வெப்ப அலை... மதிய நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!!

அப்போது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி அந்த பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்திருக்கிறார். பெண் அலறும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியதில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் பெண் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஜான் பால்ராஜ்(38), என்பதும் குடிபோதையில் இருந்த அந்த நபர் வீட்டில் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து இது போன்ற சம்பவங்களில் வேறு எங்கேயாவது ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News