கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் -வைகோ!

வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jul 30, 2018, 11:36 AM IST
கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் -வைகோ! title=

வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!!

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை நாள் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், கருணாதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். 

இவர்களை தொடர்ந்து, ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியபோது...!  

ஆபத்தான நிலையில் இருந்து தேறி மன உறுதியுடன் முன்னேறி வருகிறார். அடக்குமறை மற்றும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக போராடிய கருணாநிதி, நோயிலிருந்தும் மீண்டு வருவார் எனத் தெரிவித்தார். 

மேலும், இது மருத்துவ அதிசயம். அவர் பல போராட்டங்களை தாண்டி வந்துள்ளார். அது போல தற்போது எமனுடன் போராடிக் கொண்டு இருக்கிறார். எமனையும் வென்று மீண்டு வருவார் என கூறினார். 

 

Trending News