திருமணம் செய்து வைக்காத விரக்தியில் மகன் வெறிச்செயல்

KALLAKURICHI : கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இரும்பு கம்பியால் மகன், தந்தையை அடித்து கொன்ற செய்த கொடூரம் சம்பவத்தின் முழு பின்னணி 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 27, 2022, 11:04 AM IST
  • திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பயங்கரம்
  • தடுக்க வந்த தாயையும் பலமாக தாக்கிய மகன்
  • உயிருக்கு போராடிய நிலையில் தாய் தீவிர சிகிச்சை
திருமணம் செய்து வைக்காத விரக்தியில் மகன் வெறிச்செயல் title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் கா.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது மூத்த மகன் பாலகிருஷ்ணன். பட்டதாரியான அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணனுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாலகிருஷ்ணனுக்கும் அவரது தாய் சின்னபொண்ணுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் பாலகிருஷ்ணனைத் தந்தை பழனிவேல் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

Crime,Murder,kallakurichi,marriage, police,திருமணம் செய்து வைக்காத விரக்தியில்

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் தனக்கு ஏன்? இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி திட்டியபடி ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தந்தையின் தலையில் பலமாக அடிக்க சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம் - காதல் திருமணம் செய்த தம்பதி கொலை !

Crime,Murder,kallakurichi,marriage, police,திருமணம் செய்து வைக்காத விரக்தியில்

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி போலீசார் தந்தையை அடித்து கொலை செய்த பாலகிருஷ்ணனை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தந்தையை தாக்கும் போது தடுக்க முயன்ற தாய் சின்னப்பொண்ணுவையும், பாலகிருஷ்ணன் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் செய்து வைக்காத விரக்தியில் தந்தையை இரும்புராடால் அடித்துக் கொலை செய்த மகனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Crime News: மது கொடுத்து கணவரை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மனைவி; தேவிபட்டினத்தில் நடந்த கொடூரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News