ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 10:13 AM IST
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்! title=

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரை ஓரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து இருந்தது. 

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் (Edappadi Palaniswami), துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தனர். தற்போது ஜெயலலிதாவுக்கு (Jayalalitha) நினைவிடம் கட்டப்படும் பணிகள் முடிவடைந்து. 

ALSO READ | ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

இந்நிலையில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். 

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அலை அலையாக குவிந்துள்ளனர். மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, தஞ்சை, வேலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் சென்னையில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ALSO READ | 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை!!

இன்று காலை முதல் அவர்கள் மெரினா கடற்கரையில் வந்து ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டபடி உள்ளனர். எனவே எங்கு நோக்கினும் மனித தலைகளாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News