108 ஆம்புலன்சில் திடீர் தீ விபத்து! கரூரில் பரபரப்பு!

கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி அருகில் நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Last Updated : May 7, 2019, 07:15 PM IST
108 ஆம்புலன்சில் திடீர் தீ விபத்து! கரூரில் பரபரப்பு! title=

கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி அருகில் நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி அருகில் 108 ஆம்புலன்சில் நோயாளியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஆம்புலன்சின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

இதை அறிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளே இருந்தவர்களை ஆம்புலன்சிலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி, அவருடன் வந்தவர்கள் மற்றும் 2 நர்ஸ்கள் கீழே இறங்கினர். 

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். அவர்கள் ஆம்புலன்சில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News