காஞ்சிபுரத்தில் மீண்டும் என்கவுண்டர் - 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

காஞ்சிபுரத்தில் ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், காவல்துறையினர் 2 ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 27, 2023, 01:43 PM IST
  • காஞ்சிபுரத்தில் காவல்துறை என்கவுண்டர்
  • 2 ரவுடிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
  • இருவரும் கொலை வழக்கு குற்றவாளிகள்
காஞ்சிபுரத்தில் மீண்டும் என்கவுண்டர் - 2 ரவுடிகள் சுட்டுக்கொலை title=

காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை விவகாரத்தில் ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு காவலர்களை வடக்கு மணடல ஐ.ஜி. கண்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி  பிரபா என்கிற பிரபாகரனை நேற்று காரில் வந்த மர்ம கும்பல் பிரபா மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்தியது. 

மேலும் படிக்க | சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!

இதில் அச்சமடைந்து ஓடிய பிரபாவை ஓட ஓட விரட்டிச் சென்று சிவ காஞ்சி புற காவல் நிலையம் அருகே சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சிலர் புதிய ரயில் நிலையம் இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடம் சென்ற போலீசார் ரவுடி பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ரகு என்கிற ரகுவரன் மற்றும் கருப்பு பாஷா என்கிற ஹசைன் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் மூலம் சிவகாஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி தப்பி செல்ல முயன்றனர். அதனையடுத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய போது தற்காப்பிற்காக ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலர்கள் இருவருக்கும் காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மீனாட்சி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் இரு காவலர்களையும் வடக்கு மணடல ஐ.ஜி. கண்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பொன்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உள்ளிட்ட காவல் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

 

மேலும் படிக்க | சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது... முழு பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News