இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

Last Updated : Nov 18, 2016, 12:13 PM IST
இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு title=

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அதிமுக - எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் எம்எல்ஏ ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த 4 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. 

நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேர் களத்தில் உள்ளனர். 

தஞ்சை தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகிறார்கள். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக, நாம் தமிழர் கட்சி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விரலில் வைக்கும் ‘மை’ உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் இன்று காலை முதல் கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் இன்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த தொகுதிகளின் அனல்பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்த. நாளை வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Trending News