மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய கூடாது: துரைமுருகன்

Last Updated : Aug 27, 2017, 11:34 AM IST
மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய கூடாது: துரைமுருகன்  title=

சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். 

இந்த சந்திப்பில் முதல்வர் ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் அறிவித்துள்ளதால் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கூறி திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் மனு அளித்தனர்.

ஆளுநரை சந்தித்த பின் துரைமுருகன் அளித்த பேட்டி:-

மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய கூடாது என்பது குறித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துடன் ஆளுநரை சந்தித்தோம். 

முதல்வர் எடப்பாடிக்கு 113 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எனவே, சட்டசபையை உடனடியாக கூட்டி, முதல்வர் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கூறினோம். நான் எல்லாவற்றையும் அறிவேன். இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் கூறினார்.

இவ்வாறு அவர் பேட்டி கூறினார்.

Trending News