வாக்குறுதிகளை நிறைவேற்ற தெரியாதவர் மோடி -MK ஸ்டாலின்!

கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற தெரியாதவர் மோடி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 6, 2019, 11:26 PM IST
வாக்குறுதிகளை நிறைவேற்ற தெரியாதவர் மோடி -MK ஸ்டாலின்! title=

கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற தெரியாதவர் மோடி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

ஆரணியில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது...

"தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவித்திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று நாட்டு பாதுகாப்பு மீது அக்கறை வந்துள்ளது. தேர்தலுக்கு முன் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்து உள்ளனர். இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி வேறு, தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறார். தேர்தல் முடிந்தால் இந்தியாவிலேயே இருக்க மாட்டார். 

இதுவரை அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியது கிடையாது. தான் அட்சிக்கு வரவேண்டுமென்று வாக்குறுதிகளை அள்ளி வீசியவர், தனது வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றியுள்ளாரா?... தான் வாக்குறுதி அளித்த படி ஒவ்வொருவர் வங்கிக்கணிக்கிலும் மோடி ரூ.15 லட்சம் செலுத்தி உள்ளாரா? என கேள்வி எழுப்பினார். 

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் நரேந்திர மோடி அச்சத்துல் உள்ளார். தமிழகத்திற்கு மீண்டும் பல நலத்திட்டங்கள் கிடைத்திட மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியின் சாதனை என குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டிய நாள் ஏப்.18-ஆம் தேதி, மக்கள் உணர்வுகளை பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தெரிவித்தார். ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

Trending News