சசி.,வுடன் சேர்ந்து தீபக் ஜெ.,வை கொன்றனர்: தீபா குற்றச்சாட்டு

Last Updated : Jun 11, 2017, 12:28 PM IST
சசி.,வுடன் சேர்ந்து தீபக் ஜெ.,வை கொன்றனர்: தீபா குற்றச்சாட்டு title=

சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா திடீரென வந்து உள்ளார். 

போயஸ் தோட்டத்திற்கு சென்ற ஜெ.தீபா ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா:-

பணத்திற்காக சொந்த அத்தையான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவுடன் சேர்ந்து கொன்று விட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 

போயஸ் தோட்ட இல்லத்திற்கு தீபக் அழைத்ததால் தான் தாம் வந்ததாக விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய வருமாறு தீபக் தன்னை திட்டமிட்டு வரவைத்ததாக புகார் கூறியுள்ளார். 

சசிகலாவின் ஆட்களுடன் சேர்ந்து சதி செய்து தம்மை போயஸ் இல்லத்திற்கு வர வைத்து ஏதோ செய்யப் பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் நடப்பது ஆட்சியே கிடையாது உடனடியாக இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார். தம்மையும் தமது பாதுகாவலரையும் தாக்கி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.  

Trending News