பெற்ற மகளை தீயிட்டு கொளுத்திய தாய்; தீயில் கருகிய பிஞ்சின் உடல்

மூன்றாவது கணவரிடம் தனது கற்பை நிரூபிக்க பெற்ற மகளையே தீயில் இட்டு கொளுத்தினார். முறையற்றவர்களின் இந்த சண்டையில் பிஞ்சின் உடல்  தீயில் கருகியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2022, 07:56 PM IST
பெற்ற மகளை தீயிட்டு கொளுத்திய தாய்; தீயில் கருகிய பிஞ்சின் உடல் title=

திருவொற்றியூர் பத்மநாபா காலனியை சேர்ந்தவர்  பத்மநாபன் இவர் ஐஓசியில் டேங்கர் லாரியில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். பத்மநாபன்  ஜெயலட்சுமி என்பவரை  கடந்த 2014ம் ஆண்டு திருமணம் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக ஜெயலட்சுமிக்கு பால்வண்ணன் என்பவருக்கும் முதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பிறந்த குழந்தை தற்போது தூத்துக்குடியில் நர்சிங் படித்து வருகின்ற நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்னையால்  பால்வண்ணன் பிரிந்து சென்ற பின் ஜெயலஷ்மி பால்வண்ணனின் தம்பியான துரைராஜ் என்பவரை இரண்டாவதாக மணமுடித்தார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும்   பிறந்தது மீண்டும் பிரச்சனைகள் காரணமாக துரைராஜூம் பிரிந்து சென்றார். 

அதன்பின் 2014 ஆம் வருடம் பத்மநாபனை மூன்றாவது கணவராக ஜெயலஷ்மி திருமணம் செய்துள்ளார். பத்மநாபனுக்கும் இரண்டு குழந்தைகளை பெற்ற  ஜெயலட்சுமி அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.

ALSO READ | போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி

இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகம் கொண்டவரான பத்மநாபன் பல நேரங்களில் ஜெயலட்சுமியிடம் இது குறித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். தனது குழந்தைகளை காப்பாற்றவே மூன்றாவது திருமணம் செய்ததாக சண்டையிடும் போதெல்லாம் பத்மநாபனிடம் ஜெயலட்சுமி கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்பாத பத்மநாபன் எப்போதாவது நீ எங்கு சென்று வருகிறாய் என கேட்டுக் கொண்டிருந்தவர். அடிக்கடி சந்தேகப்படும்படி பல கேள்விகள் கேட்பதை வழக்கமாக்கினார்.

நேற்று இரவு பன்னிரண்டரை மணி அளவில் ஜெயலட்சுமியிடம் நீ கற்புக்கரசியாக இருந்தாள் பெண் குழந்தை மீது  மண்ணெண்ணெய் ஊற்றி  தீ பற்றவை; நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது என சொல்லியுள்ளார். சண்டை முற்றிய நிலையில்  விரக்தியில் தனது குழந்தையின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயலஷ்மி தீ பற்றவைத்துள்ளார். சிறுமியின் உடம்பில் தீ பற்றவே கதறி துடித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட கணவன் மனைவி இருவரும், சிறுமியை காப்பாற்ற  போர்வையை கொண்டு அணைக்க முயற்சியும் செய்துள்ளனர். 

இதனிடையே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆய்வாளர் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு 78% தீக்காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறாள் சிறுமியிடம் மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் வாக்குமூலமும் பெற்றுள்ளார்.  

இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமியின் பெற்றோர்களான  பத்மநாபனை முதல் குற்றவாளியாகவும் ஜெயலக்ஷ்மியை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து கைது  செய்தனர்.

ALSO READ  | போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை - கணவனை கொன்ற மனைவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News