சென்னை கோயம்பேடு சலூனில் முடிதிருத்தம் செய்தவர்களுக்கு கொரோனா...

கொரோனா முழு அடைப்பு விதி மீறி முடி திருத்தம் செய்யும் கடையை திறந்து வைத்திருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Last Updated : Apr 28, 2020, 06:15 AM IST
 சென்னை கோயம்பேடு சலூனில் முடிதிருத்தம் செய்தவர்களுக்கு கொரோனா... title=

கொரோனா முழு அடைப்பு விதி மீறி முடி திருத்தம் செய்யும் கடையை திறந்து வைத்திருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வழக்கமான ரோந்துப் பகுதிகளில் இருந்து எளிதாகக் காணமுடியாத ஒரு குறுகிய தெருவில் இந்த கடை இருந்ததால் கண்கானிக்க இயலவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

36 வயதான சிகையலங்கார நிபுணர், சென்னை கோயம்பேடுவில் தனது சலூனை முழு அடைப்பின் போது சட்டவிரோதமாக திறந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு தவறாமல் வாகனம் ஓட்டும் ஈரோடில் இருந்து ஒரு டிரக் டிரைவர் சலூனுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. ஈரோடு வாகன ஓட்டியின் கொரோனா சோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சலூனில் சிகையலங்காரம் செய்துகொண்ட ஏழு வாடிக்கையாளர்கள் நெற்குன்றமில் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களின் சோதனை முடிவுகளும் காத்திருக்கின்றன. 

சலூன் உரிமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், கொரோனா சோதனை செய்யவேண்டும் என முன்வந்த இன்னும் சிலரும் கோயம்பேடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், மேலும் பலர் இந்த சலூனுக்கு வருகை தந்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கார்ப்பரேஷன் வட்டாரங்களின்படி, அந்த நபர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் சோதனைக்காக அவர் தானாக முன்வந்து அதிகாரிகளை அணுகியதாக கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கடை கோயம்பேடுவில் இருக்கும் நிலையில், ​​அவர் வலசரவக்கத்தில் வசித்து வந்தார். சம்பவத்திற்கு பின்னர் அவரது குடும்ப தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

"சலூன் அத்தியாவசிய பொருட்களின் கீழ் வரவில்லை என்றாலும், அந்த நபர் சந்தைக்கு வருகை தரும் தொழிலாளர்களுக்காக கடையைத் திறந்துள்ளார். அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதும் உடனடியாக கடை அடையாளம் காணப்பட்டு மூடப்பட்டது" என்று காவல்துறை உதவி ஆணையர் (கோயம்பேடு) ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Trending News