புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்!

Police Station : காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை உறவினர்கள் கடத்தியது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 14, 2024, 06:55 PM IST
புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்! title=

Love Marriage Coonoor : குன்னூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை உறவினர்கள் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்து அருவங்காடு பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான கவின்குமார் (24) எடப்பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷிணியும் (24) கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் புகுந்தனர் இதன் பின்னர் அவர்களை பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ம் தேதி இரவு பெண்ணின் உறவினர்கள் சிலர் கவின்குமார் வீட்டிற்கு வந்து அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோரை தாக்கிவிட்டு ரோஷினியை கடத்திச் சென்று விட்டனர் இதுகுறித்து கவின் குமார் அளித்த புகாரின் பேரில் அருவங்களோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கவின்குமாரின் மனைவியை தேடி வந்தனர்.

மேலும் படிக்க | ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!

மேலும் ரோஷினியின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருந்தது இதற்கிடையே ரோஷினியின் தந்தை ரோஷினியை ஓசூருக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது இதைத் தொடர்ந்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் உடனடியாக ஓசூருக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த ரோஷணியை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து ரோஷினியை கடத்திச் சென்றதாக அவருடைய தந்தை, தாய்,தாய் மாமன் ,மற்றும் உறவினர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் அவர்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | முதல் டேட்டில் மறக்கக் கூடாதா 4 விஷயங்கள்... காதல் மலர இது ரொம்ப முக்கியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News