கொடூரம்! 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகிறது. 

Last Updated : Feb 26, 2018, 12:40 PM IST
கொடூரம்! 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! title=

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகிறது. 

விழுப்புரம் மாவட்ட வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி என்பவர் வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் 14 வயது சிறுமி என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளனர். மேலும் அந்த சிறுமியின்  தாய் ஆராயி மீதும் கொலைவெறி தாக்குதலும் நடத்தியுள்ளனர். 

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்து தாய் மற்றும் மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வலுத்துவருகிறது. 

Trending News