ஜப்பான் ஓபன்; அரையிறுதி போட்டியில் வெளியேறினார் சாய் பிரணீத்!

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் ஆடவர் அரை இறுதி போட்டியில் வெளியேறினார்!

Last Updated : Jul 27, 2019, 04:01 PM IST
ஜப்பான் ஓபன்; அரையிறுதி போட்டியில் வெளியேறினார் சாய் பிரணீத்! title=

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் ஆடவர் அரை இறுதி போட்டியில் வெளியேறினார்!

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் பாட்மிண்டன் தொடர் ஆடவர் அரை இறுதி போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், உலகின் நம்பர் ஒன் கெண்டோ மொமோதாவிடம் மோதினார். 

பரபரப்பாக சென்ற இந்த 45 நிமிட ஆட்டத்தில் 18-21, 12-21 என்ற செட் கணக்கில் சாய் பிரணீத் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஆட்டத்தின் முதல் 3 நிமிடத்தில் 3-1 என்ற விதத்தில் முன்னிலை வகித்த சாய் பிரணீத். பின்னர், மொமோதா 11-8 என்ற செட் கணக்கில் முந்தினார்.

இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வந்த பிரணீத், அடுத்த 23 நிமிடத்தில் 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார்.

தொடர்ந்து இரண்டாவது போட்டியில், மொமோதா பிரணீத்தை ஆடவிடாமல் தடுத்து, 6-9 என்றிருந்த கணக்கை 12-9 என்று மாற்றினார். தொடர்ந்து 6 புள்ளிகள் பெற்றார்.

அதன்பின்னர், உலகின் நம்பர் ஒன் வீரர் தொடர்ந்து 7 புள்ளிகள் முன்னிலை பெற்று 22 நிமிடத்தில் 12-21 என்ற செட் கணக்கை எட்டினார். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் கெண்டோ தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வழி வகுத்துள்ளது. 

இதனையடுத்து வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதி போட்டியில் கான் ஓ ஜோர்ஜென்சென் அல்லது ஜொனாடன் கிரிஸ்ட்டியை சந்திக்கவுள்ளார் கெண்டோ மொமோதா.

Trending News