தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 10000 ரன்கள் குவித்தார் ரோகித்!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, புதனன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!

Last Updated : Jan 29, 2020, 06:37 PM IST
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 10000 ரன்கள் குவித்தார் ரோகித்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, புதனன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 10000 சர்வதேச ரன்கள் குவித்தோர் பட்டியலில் ரோகித் சர்மாவும் தற்போது இடம்பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் சராசரியாக 50-க்கு மேல் இருக்கும் ஒரே பேட்ஸ்மேன் மும்பை பேட்ஸ்மேன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவுக்கு இந்த சாதனையினை (10,117 ரன்கள் - சராசரியாக 50.33) படைக்க  219 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டுள்ளளது. 

இவருக்கு முன்னதாக சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மா இப்பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில், ரோகித் முறையே 7 மற்றும் 8 ரன்கள் எடுத்த பிறகு முதல் இரண்டு போட்டிகளில் இந்த சாதனை படைக்காமல் வெளியேறினார். என்றபோதிலும் இன்று தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஒரு சிறந்த மறுபிரவேசம் செய்தார், குறிப்பாக அவர் 23 பந்துகளில் தனது அரைசதத்தை வீழ்த்தினார். கிவிஸுக்கு எதிராக ரோகித்ல 40 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அவர் அமைந்தார்.

முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரை வென்றது இந்தியா. இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்ககு 179 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 65 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 38(27) ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்த அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்ரர் மார்டின் குப்டில் 31(21) ரன்களிலும், கொளின் முன்றோ 14(16) ரன்களிலும் வெளியேற அணித்தலைவர் கேன் வில்லயம்சன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற அணியின் எண்ணிக்கை 179-ல் நின்றது. நியூசிலாந்த அணிக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவிக்கப்பட்ட நிலையில் போட்டி சமநிலையில் நின்றது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியது. இம்முறை முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பூம்ரா வீசிய 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியது.

கே.எல் ராகுல் மற்றும் ரோகித்சர்மா இந்திய அணிக்காக களமிறங்கினர். துவக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இறுதி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Trending News