ஆசிய தடகள போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சித்ரா!

ஆசிய தடகள போட்டியின் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்!

Last Updated : Apr 25, 2019, 06:18 AM IST
ஆசிய தடகள போட்டி; தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சித்ரா! title=

ஆசிய தடகள போட்டியின் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்!

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது. 

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.

கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்ற 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது.

நான்கு நாட்கள் நடைப்பெற்ற போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.  

Trending News