பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்? isolation பிரிவில் இருப்பதாக தகவல்...

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கொரோனா வைரஸின் அச்சத்தின் மத்தியில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Mar 14, 2020, 02:30 PM IST
பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்? isolation பிரிவில் இருப்பதாக தகவல்... title=

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கொரோனா வைரஸின் அச்சத்தின் மத்தியில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கொரோனா வைரஸின் அச்சத்தின் மத்தியில் 24 மணி நேர தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

"பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க, முதல் ஒருநாள் முடிவில் தொண்டை வலி ஏற்பட்டதாக அடுத்த 24 மணிநேரங்களுக்கு அணி ஹோட்டலில் லாக்கி பெர்குசன் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டிருப்பதாகவும், சோதனை முடிவுகள் வந்த பிறகே அவர் அணிக்கு திரும்புவார் எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டது. இந்நிலையில் தற்போது அவரது ரத்த மாதிரி எதிர்மறையான முடிவு வெளியிட்டிருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரப்புவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர்கள் SCG-ல் அனுமதிக்கப்படவில்லை. இதன்காரணமாக தொடரின் முதல் ஒருநாள் போட்டி வெற்று ஸ்டாண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் வியாழக்கிழமை தொண்டை புண் நோயால் பாதிக்கப்பட்டு, கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட்டார். ஆனால் சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் 83 பேரை தாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாட்டில் 2 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். முன்னதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது, மேலும் இது “ஆபத்தான அளவிலான பரவல் மற்றும் தீவிரத்தன்மை (வைரஸின்) மற்றும் ஆபத்தான அளவிலான செயலற்ற தன்மை ஆகியவற்றால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News