தொடரை வெல்லுமா இந்தியா... 187 ரன்கள் இலக்கு

3ஆவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 187 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2022, 09:00 PM IST
  • இந்தியா சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • ஆஸ்திரேலியா சார்பில் க்ரீன், டிம் டேவிட் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
  • இப்போட்டியில், ஆஸ்திரேலியா மொத்தம் 16 பவுண்டரிகளையும், 9 சிக்ஸர்களையும் அடித்தது.
தொடரை வெல்லுமா இந்தியா... 187 ரன்கள் இலக்கு  title=

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த்-க்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் மூன்று ஓவர்கள் முடிவில், தொடக்க வீரர் கேம்ரூன் க்ரீனின் அதிரடியால், ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை குவித்தது. அக்சர் படேல் வீசிய நான்காவது ஓவரில் கேப்டன் பின்ச் 7 ரன்களில் நடையைக் கட்டினார். மறுப்புறம் 19 ரன்களில் க்ரீன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, புவனேஷ்வர் வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் க்ரீன் 52 (21) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மேலும் படிக்க | ரிஷப் பந்தின் சகோதரியா இவர்... பிறந்தநாள் புகைப்படங்கள்!

இதன்மூலம், பவர்பிளே முடிவில் ஆஸ்திரேலியா 66 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிறப்பான நிலையில் இருந்தது. மேக்ஸ்வெல், ஸ்மித் ஆகியோர் களத்தில் இருந்ததால், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எகிறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மேக்ஸ்வெல் 6 (11) ரன்கள் எடுத்திருந்தபோது, அக்சர் படேலின் சிறப்பான த்ரோவால், ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து, சஹால் வீசிய 10ஆவது ஓவரில் ஸ்மித், தினேஷ் கார்த்திக்கின் அபார ஸ்டெம்பிங்கால் ஆட்டமிழந்தார். டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் சிறிதுநேரம் தாக்குபிடித்தனர். இந்த ஜோடி இணைந்து 31 ரன்களை எடுத்தபோது, இங்லிஸ் 24 (22) ரன்களில் அக்சரிடம் வீழ்ந்தார். அடுத்து களமிங்கிய மாத்யூ வேட் அக்சரின் அதே ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மேத்யூ வேட்-ஐ விரைவாக வெளியேற்றியதால், இந்திய அணிக்கு பெரிய தலைவலி நீங்கியதாக பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் டிம் டேவிட் தலைவலியாக மாறினார். டிம் டேவிட், டேனியல் சாம்ஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தார். தொடர்ந்து, பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் குவித்த அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.  சர்வதேச போட்டியில் தனது முதல் அரைசதத்தை அடித்த டிம் டேவிட் 54 (27) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். 

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவிஸல் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்துள்ளது. அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், சாஹல், புவனேஷ்வர், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெெட்டை வீழ்த்தினர். டேனியல் சாம்ஸ் 28 (20) ரன்களுடனும், கம்மின்ஸ் ரன் ஏதும் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணி இன்னும் சிறிது நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது.  

 மேலும் படிக்க | விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி! இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News