இன்று முதல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!!

அடுத்த வருடம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நுழைய, இன்று முதல் தகுதி சுற்றுப் போட்டி ஆரம்பம்.

Last Updated : Mar 4, 2018, 06:34 AM IST
இன்று முதல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! title=

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தம் 14 அணிகள் போட்டியிட்டு வந்தன. ஆனால் அடுத்த வருடம் தொடங்கும் உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டும் பங்கேற்கும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதாவது இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் ஆகும்.

இதையடுத்து, மீதம் உள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்த தகுதி சுற்றுப் போட்டி இன்று முதல் ஜிம்பாப்வேயில் துவங்கிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி சுற்றுப் போட்டி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும். இதில் வெற்றி பெரும் இரண்டு அணிகள், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தகுதி பெறும்.

தகுதி சுற்று:-

ஏ- பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், 

பி- பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

முதன் முறையாக தகுதி சுற்று போட்டிகள் நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News