வரலட்சுமி விரத ஸ்பெஷல் தீபங்கள் செல்வ வரம் தர ஏற்ற வேண்டிய தீபம்

Varalakshmi Viradham: வரலட்சுமி நோன்பை கடைபிடிப்பவர்கள் செல்வம் பெருக ஏற்ற வேண்டிய முக்கிய 3 தீபங்கள் இவை... சிறப்பு நாளில் சிறப்பு தீபங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 5, 2022, 06:37 AM IST
  • வரலட்சுமி விரத நாளன்று ஏற்ற வேண்டிய தீபங்கள்
  • தம்பதிகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் மருதாணி தீபம்
  • செல்வததை அள்ளிக் கொடுக்கும் உப்பு தீபம்
வரலட்சுமி விரத ஸ்பெஷல் தீபங்கள் செல்வ வரம் தர ஏற்ற வேண்டிய தீபம் title=

தீர்க்க சுமங்கலி பவ ஆசியை பெற்றுத் தரும் பண்டிகைகள்: ஆடி மாத பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம். இன்று, (05-08-22) வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கும் வரலட்சுமி விரதத்தின் பொழுது சுமங்கலிப் பெண்கள் விரதம் இருந்து கலசம் அமைத்து அம்பாளை அலங்கரித்து வழிபடுவார்கள். இந்த மங்கலமான நாளில் சுமங்கலிகள் மட்டுமல்ல, திருமணம் ஆகதாவர்கள், கணவர் இல்லாதவர்கள் என அனைவரும் தீபம் ஏற்றி அன்னையை வணங்குவார்கள். இன்று ஏற்றும் தீபம் வாழ்வில் வரம் தரும் என்பதை அனைவரும் அறிவார்கள். வரங்களை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம் மாங்கல்ய பலத்தை அதிகரிப்பதோடு செல்வத்தையும் மங்காப் புகழையும் மாளா நிம்மதியையும் கொடுக்கும்.

வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படும் இன்று உப்பு தீபம் ஏற்றி வழிபடலாம். தீராத கடன் தீருவதற்கும், கொடுத்த கடன் வசூல் ஆவதற்கும் உப்பு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு பெரிய அகல் விளக்கு நிறைய கல் உப்பை நிரப்பி  வைக்க வேண்டும். உப்பின் மீது வாழை இலையை வைத்து அதன் மீது சிறிய அகல் விளக்குகளில் இரண்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். உப்பு தீபம் ஏற்றும்போது இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து அகல் விளக்கில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

மேலும் படிக்க | ஸ்ரீவரலட்சுமி விரத கொழுக்கட்டை... எளிதாய் செய்ய சில டிப்ஸ்

அதேபோல மருதாணி இலை தீபம் ஏற்றி வழிபடுவது வீட்டில் சுப நிகழ்வுகளை நிகழ்த்தும். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் மருதாணி இலையானது அன்னைக்கும் மிகவும் பிடித்தமனது. மருதாணி இலையை ஒரு அகல் விளக்கில் பரப்பி அதன் மீது தீபம் ஏற்றி வழிபடலாம்.

மருதாணியை கையில் இட்டுக் கொண்டால் சருமத்துடன் இணைந்து ஒன்றாகி அழகைத் தருவது போல, கணவன் மனைவிக்குள் பிரிக்க முடியாத ஒற்றுமை ஏற்படும் என்றும், ஒருவருக்கு மற்றொருவர் அழகையும் நிம்மதியையும் கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

நெல்லிக்காய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பெரிய நெல்லிக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ளே இருக்கும் விதைப் பகுதியை நீக்கிவிட்டு சதைப் பகுதியில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். தீபம் சுடர் விட்டு நின்று மேலே நோக்கி பார்த்தவாறு எறிய வேண்டும். நெல்லிக்கனி தீபம் மிகவும் சக்தி வாய்ந்தது. பலன்களை கொடுக்கப்க்கூடியது.

மேலும் படிக்க | சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

உப்பு, மருதாணி, நெல்லிக்காய் மூன்றுமே அன்னை லட்சுமிக்கு உகந்தவை. இவற்றை பயன்படுத்துவது அன்னையின் அருளையும் ஆரோக்கியத்தையும் நமக்கு தருபவை. ஆனால், இவற்றில் விளக்கு இடுவது பொதுவாக அனைவருக்கும் தெரியாத விஷயம். 

இந்த மூன்று விதமான விளக்குகளை ஏற்றுபவர்களுக்கு வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். இழந்த பொருட்கள், பெயர், புகழ், பதவி என்று அனைத்துமே திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மூன்றுவித விளக்குகளும் அற்புதமான பரிகார விளக்குகள்.

மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News