சனிதசையால் சிக்கித்தவிக்கும் ராசிகள்: இந்த பரிகாரங்களால் பலன் கிடைக்கும்

Lord Shani Remedies: ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி தோஷத்திலிருந்து தப்பிப்பதற்கு சனிக்கிழமைகளில் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் இதோ

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2022, 06:59 PM IST
  • சனி தோஷத்திலிருந்து தப்பிப்பதற்கு சனிக்கிழமைகளில் செய்யக்கூடிய சில பரிகாரங்கள்.
  • சனிக்கிழமை சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்.
  • சனிக்கிழமையன்று கருப்பு நாய்க்கு உணவளிக்கலாம்.
சனிதசையால் சிக்கித்தவிக்கும் ராசிகள்: இந்த பரிகாரங்களால் பலன் கிடைக்கும் title=

சனி பகவான்: நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு சுப பலன்களும், தீய செயல்களைச் செய்பவர்களுக்கு அசுப பலனும் கிடைக்கின்றன. சனி பகவானை நினைத்தாலே அனைவரும் அச்சப்படுகின்றனர். ஆனால், நல்ல பலன்களை அள்ளிக்கொடுப்பதிலும் அவர் சளைத்தவர் அல்ல. 

அவருக்கு விருப்பமான முறையில் ஒருவர் நடந்துகொண்டால், அந்த நபருக்கு அவர் அனைத்து வித செல்வங்களையும் தந்து அரசனாக்குவார். எனினும், சனியின் கோப பார்வை ஒருவர் மீது பட்டுவிட்டால், அனைத்து செல்வங்களும் ஒரே நொடியில் அவரை விட்டு சென்றுவிடும். 

சனி தோஷத்திலிருந்து தப்பிப்பதற்கு சனிக்கிழமைகளில் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் இதோ: 

- சனிக்கிழமையன்று சனிபகவானை சிரத்தையுடன் வழிபட வேண்டும். இதனால், அவர் விரைவில் மகிழ்ச்சியடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

- சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் அரச மரத்தின் கீழ் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றவும். மேலும். ஏழைகளுக்கு அதிகாலையில் பால் வழங்கவும்.

- சனிக்கிழமையன்று, உங்கள் கையின் அளவில் 19 கை நீளமான கருப்பு நூலை எடுத்து, அதை மாலையாக செய்து அணிந்துகொள்ளுங்கள். இந்த பரிகாரம் சனி தோஷத்தை தணிக்கிறது.

- வெள்ளிக்கிழமை இரவு கருப்பு கொண்டைக்கடலை ஊறவைத்து, சனிக்கிழமையன்று கடலை, பச்சை நிலக்கரி மற்றும் இரும்பு இலை ஆகியவற்றை ஒரு கருப்பு துணியில் கட்டி மீன் உள்ள நீர்நிலையில் போடவும். ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் இதைச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | தீபாவளியை களை கட்ட வைக்கும் சூரிய பெயர்ச்சி! வாயைக் கட்டுப்படுத்தினால் நிம்மதி 

- வெண்கலப் பாத்திரத்தில் நல்லெண்ணெயை நிரப்பி அதில் உங்கள் முகத்தைப் பார்த்து பின், சனிக்கிழமையில் தானம் செய்யுங்கள்.

- சனியின் மகாதசை நீங்க அரச மரத்தடியில் நான்கு முக தீபம் ஏற்றவும். மேலும் மூன்று முறை மரத்தை வலம் வரவும். இந்த பரிகாரம் சனி பகவானை வெகுவாக மைழ்விக்கும். 

- ஜாதகத்தில் சனி வலுப்பெற, வலது கை நடுவிரலில் இரும்பு மோதிரத்தை அணியவும். 

- சனிக்கிழமை சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்.

- சனிக்கிழமையில் காகங்களுக்கு தானியம் கொடுங்கள்.

- ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். சனிக்கிழமையன்று சனி தொடர்பான விஷயங்களை உங்கள் திறனுக்கு ஏற்ப தானம் செய்யுங்கள்.

- சனிக்கிழமையன்று கருப்பு நாய்க்கு உணவளிக்கலாம். 

- சனிக்கிழமை இந்த மந்திரங்களை உச்சரிப்பது பலன் அளிக்கும்: 

ஓம் சனீஸ்வராய நமஹ
ஓ சாந்தாய நமஹ
ஓம் ஸர்வபீஷ்டபிரதாயினே நமஹ
ஓம் ஶரண்யாம் நமஹ
ஓம் வரேண்யாம் நமஹ
ஓம் ஸர்வேசாய நமஹ
ஓம் ஸௌம்யாய நமஹ
ஓம் ஸுரவந்த்யாய நமஹ

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சனி: தீபாவளி முதல் 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News