Guru Peyarchi Palangal 2024: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றும். மே மாத தொடக்கத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் குரு பகவான் தற்போது பெயர்ச்சி அடையப் போகிறார். தற்போது குரு மேஷ ராசியில் பயணித்து வருகிறார், வருகிற மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார். இதன் தாக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்படும்.
குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிடத்தின் படி, கிரகத்தின் தெய்வமான வியாழன் ராசி மாறும் போதெல்லாம், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் சாதகமான விளைவைக் ஏற்படுத்தக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், கெட்ட நேரமானது நல்ல நேரமாக மாறும். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். அப்படியான சூழ்நிலையில், 3 அதிர்ஷ்ட ராசிகள் உள்ளன, அவை குருவால் பலன் அடைவார்கள். எனவே இந்த ராசிகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ஜோதிட சாஸ்திரப்படி, குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் மட்டுமே பெயர்ச்சி அடையப் போகிறார். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பொருளாதார நிலை மேம்படும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ரிஷப ராசி மாணவர்களுக்கு வெற்றி அடைவார்கள். உறவுகள் இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லலாம்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றம் சாதகமான பலனைத் தரப்போகிறது. இக்காலத்தில் வாகனம், நிலம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக வேலையில் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இப்போது அதற்கு சரியான நேரம் ஆகும். இந்த காலகட்டத்தில் சம்பளம் உயர வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வியாபாரம் வேகம் பெறும். சிக்கிய பணத்தை மீண்டும் திரும்ப கிடைக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றத்தால் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கலாம். பொருளாதார நிலை முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வும் வழங்கப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ