Panch Mahapurush Raj Yoga: பஞ்ச மகாபுருஷ யோகத்தால் பணயோகம் பெறும் ராசிக்கார ராசிகள்

30 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட பஞ்ச மகாயோகத்தால் பண வரவில் குளிக்கும் ராசிக்காரர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2022, 07:27 PM IST
  • 30 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட பஞ்ச மகாயோகம்
  • பண வரவில் குளிக்கும் ராசிக்காரர்கள்
  • சிம்மத்திற்கு சிங்க நடை போடும் காலம் இது
Panch Mahapurush Raj Yoga: பஞ்ச மகாபுருஷ யோகத்தால் பணயோகம் பெறும் ராசிக்கார ராசிகள் title=

Panch Mahapurush Raj Yoga: ஜோதிடத்தில் யோகங்களுக்கு என தனி இடம் உண்டு. சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாக்கும் யோகம், சிலருக்கு சாதாரணமாக இருக்கிறது.

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு கிரகங்களின் சங்கமத்தால் உருவான 'பஞ்ச மஹாபுருஷ ராஜயோகம்' 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைத் தரவிருக்கிறது.

ஜூன் 2022ல் ஏற்பட்ட கிரக மாற்றங்களின் காரணமாக, ஒரு பெரிய தற்செயல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. புதன், சுக்கிரன் மற்றும் சனி இணைந்து பஞ்ச மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கியது. இந்த ராஜயோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில கோள்கள் இணைவதும், விலகுவதும் குறிப்பிட்ட யோகத்தை உருவாக்குகின்றன. அதிலும் கிரகங்களின் இணைவால் ஏற்படும் யோகம் பலன்களை பல மடங்கு அதிகரிக்கிறது.

தற்போது மீண்டும் கிரகங்களின் ஒரு பெரிய தற்செயல் இணைவு ஜூன் 18ஆம் தேதி ஏற்பட்டது. அது, சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசித்த நிகழ்வு ஆகும். இதனால் பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கிறது.

மேலும் படிக்க | Astro Remedies: சகல தோஷங்களையும் நீக்கும் சோமவார விரதம்

பஞ்ச மகாபுருஷ் ராஜயோகம் 
புதன் கிரகம் ஏற்கனவே ரிஷப ராசியில் உள்ளது. ஜூன் 18 அன்று, வெள்ளி கிரகமும் ரிஷப ராசிக்குள் நுழைந்தது. அதே நேரத்தில், சனி கிரகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு  கும்பத்தில் உள்ளது. இதன் காரணமாக பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகியிருக்கிறது. இந்த யோகத்தால் பயனடையும் 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான்...

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் மகா ராஜயோகங்கள் உருவாகியிருப்பது தொழிலில் வெற்றியைத் தேடித் தரும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சிறப்பான வேலை கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பணம், கௌரவம் என சமூகத்தில் கெளரவம் கூடும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜயோகமான காலம் இது. வேலையில் பெரும் வெற்றி, தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

மேலும் படிக்க | அனைத்து தோஷங்களும் நீங்க, சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்

விருச்சிகம்: மகா புருஷ யோகத்தின் முழுப் பயன்களையும் அடையும் ராசிக்காரர்கள் இவர்களே. புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு என மகிழ்ச்சியின் உச்சத்தில் சஞ்சரிக்கும் யோகம் உருவாகியுள்ளது.

தொழில்-வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறவிருக்கு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் பலனளிக்கும் ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சித் தரும் செய்தி. இந்த ஒப்பந்தம் தொழில் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது காதல் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மகாபுருஷ் ராஜயோகம் பெரும் மகிழ்ச்சியையும் செல்வச் செழிப்பையும் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வழிகளில் இருந்து நிறைய பணம் வரும்.

வீடு-கார் என சொத்துக்களில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த ராஜயோக காலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் கும்ப ராசிக்காரர்களே...

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News