சூரியனின் ஆதிக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

சூரியனின் ஆதிக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க இருக்கும் நிலையில், சில நட்சத்திரக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2022, 06:52 AM IST
  • சூரியனின் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்
  • இந்த நட்சத்திரக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
சூரியனின் ஆதிக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் title=

ஆவணி மாதத்தில் சிம்மத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதையும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இங்கே தெரிந்து கொள்வோம். 

தனுசு ராசி

தனுசு ராசியின் மூலம் நட்சத்திரகாரர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கலாம். தேவையற்ற மனக்கசப்பு, மன சஞ்சலம் உண்டாகும்.கவனமாக இருக்க வேண்டும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நிதி நிலை அதிகரிக்கும். வேலையில் லாபம் கூடும். மனதில் தைரியம் கூடும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வாக்கு வன்மையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. லாபம் கிடைக்கும். பேச்சு மூலம் வெற்றி உண்டாகும். பணவரவு கூடும்.

மேலும் படிக்க | செப்டம்பரின் மிகப்பெரிய ராசி மாற்றம்: சூரியனின் மாற்றத்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

​மகரம் 

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். விடாமுயற்சி பலன் தரும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பிரிந்த உறவுகள் சேரும். அலைச்சல்  அதிகரிக்கும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது அவசியம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. 

​கும்பம் 

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எளிதாக முடியும் என எதிர்பாராத விஷயங்கள் இழுபறியாக வாய்ப்புள்ளது. கடின வேலைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் பெற சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு மற்றவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். வீண் செலவுகள் உண்டாகும். போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.  பூரட்டாதி நட்சத்திரகார்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். ஆபத்தான வேலை, ஆயுதம், நெருப்பு இவற்றை கையாள்வதில் கவனம் தேவை. எதிலும் மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க | செப்டம்பர் 12 முதல் இந்த ராசிகளுக்கு பிரச்சனை: அதிகபட்ச கவனம் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News