தண்டவாளத்தில் வந்த கண்ணுக்குட்டி, திடீரென நின்ற ரயில் - வைரல் வீடியோ

viral train video : ரயில் தண்டவாளத்தில் கண்ணுக்குட்டி மாடு வந்தபோது லோகோ பைலட் திடீரென ரயிலை நிறுத்திய நெகழ்ச்சியான வீடியோ வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 8, 2024, 10:02 AM IST
  • ரயில் தண்டவாளத்தில் குறுக்கே வந்த மாடு
  • லோகோ பைலட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
  • உயிர் பிழைத்து தப்பிய மாடு வீடியோ வைரல்
தண்டவாளத்தில் வந்த கண்ணுக்குட்டி, திடீரென நின்ற ரயில் - வைரல் வீடியோ title=

Viral Video:  ரயில் வேகமாக தண்டவாளத்தில் செல்லும்போது குறுக்கே யார் வந்தாலும், எது வந்தாலும் விபத்தில் இருந்து தப்ப முடியாது. அதனால் உயிரிழப்பு ஏற்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா முழுவதும் தினசரி ரயில் தண்டவாளத்தில் நடக்கும் விபத்துகள் ஏராளம். இந்த செய்தி மனதுக்கு ஒருவிதமான ரணத்தை ஏற்படுத்தும் அதேநேரத்தில் சில இடங்களில் லோகோ பைலட்டுகள் அசாத்திய முயற்சி செய்து ஓர் உயிரை காப்பாற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடக்கும். அப்படியான ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில் பசு மாட்டின் கண்ணுக்குட்டி பெரிய விபத்தில் தப்பித்திருக்கிறது. லோகோ பைலட் முயற்சியால் அந்த கண்ணுக்குட்டி உயிர் பிழைத்திருக்கிறது என்றே சொல்லலாம். 

மேலும் படிக்க | பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ

வைரலான வீடியோவில் ரயில் ஒன்று தண்டவாளத்தில் செல்கிறது. அப்போது தூரத்தில் கண்ணுக்குட்டி ஒன்று தண்டவாளத்துக்குள் வருகிறது. இதனை லோகோ பைலட் பார்த்துவிடுகிறார். உடனே அந்தக் கண்ணுக்குட்டியை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்த அவர் ரயிலின் வேகத்தை குறைத்ததுடன், எச்சரிக்கை ஒலியையும் எழுப்பிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த கண்ணுக்குட்டி ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கி செல்லவில்லை. 

இதனை பார்த்து தெரிந்து கொண்ட லோகோ பைலட் ஒருகட்டத்தில் ரயிலையே அந்தக் கண்ணுக்குட்டிக்காக நிறுத்திவிடுகிறார். அதன்பின்னரே கண்ணுக்குட்டி தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கிச் செல்கிறது. லோகோ பைலட் நினைத்திருந்தால் வேகமாக ரயிலை இயக்கியிருக்க முடியும். கண்ணுக்குட்டி மீது மோதியும் இருக்க முடியும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. லோகோ பைலட்டின் மனிதாபிமானமிக்க இந்த செயலால் ஒரு கண்ணுக்குட்டி உயிர் பிழைத்திருக்கிறது. இந்தவீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கும் நிலையில் கண்ணுக்குட்டியின் உயிரை காப்பாற்றிய அவருக்கு எல்லோரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ரயில் தண்டவாளத்தில் சிக்கி அதிகம் உயிரிழக்கும் விலங்கினங்களில் மாடு மற்றும் யானைகள் தான் இருக்கின்றன. அண்மையில் வனப்பகுதிக்குள் சென்ற ரயிலில் அடிப்பட்டு  ஒரு யானை உயிரிழந்த வீடியோ வெளியாகி காண்போரின் நெஞ்சை உருகுலைய வைத்தது. இன்னொரு விபத்து வீடியோவில் கடுமையான காயங்களுடன் கால்கள் துண்டாகி யானை உயிரிழக்கவும் நேரிட்டது. இதற்கு மத்தியில் கண்ணுக்குட்டி ரயில் தண்டவாளத்தில் நின்று லோகோ பைலட்டின் கருணை மனதினால் உயிர்பிழைத்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News