கணவனை காதலியுடன் சேர்த்து வைக்க விவாகரத்து அளித்த மனைவி trend ஆகிறார் Twitter-ல்!!

தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற நபரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்த நபருக்கு தன் காதலி தன் மனைவி என இருவரிடமும் காதல் இருந்தது என தெரிவித்தார்.

Last Updated : Nov 9, 2020, 03:42 PM IST
  • கணவன் அவருடைய காதலியுடன் சேர்ந்து வாழ அவருக்கு விவாகரத்து அளித்தார் ஒரு பெண்.
  • இந்த சம்பவம் போபாலில் நடந்துள்ளது.
  • பெண்ணின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கணவனை காதலியுடன் சேர்த்து வைக்க விவாகரத்து அளித்த மனைவி trend ஆகிறார் Twitter-ல்!! title=

போபால்: சில சமயங்களில் திரைப்படங்களில் மட்டுமே நாம் காணும் காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபாலில் (Bhopal) நடந்துள்ளது. ஒரு திருமணமான பெண் தனது கணவன் அவருடைய காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

விவாகரத்தான பெண் தனது கணவருடனான 3 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார். தனது கணவர் காதலிக்கும் பெண்ணுடன் அவர் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்பதற்காக அவர் இந்த விவாகரத்தை (Divorce) அளித்தார் என கூறப்படுகிறது.

தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற நபரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்த நபருக்கு தன் காதலி தன் மனைவி என இருவரிடமும் காதல் இருந்தது என தெரிவித்தார். ஆனால் இரண்டு மனைவிகள் இருப்பது சட்டவிரோதமானது என்பதால், அவரது மனைவி இந்த முடிவை எடுத்தார் என வழக்கறிஞர் கூறினார்.

“அவர் இருவருடனும் திருமண உறவில் இருக்க விரும்பினார். ஆனால் சட்டபூர்வமாக அது சாத்தியமில்லை. ஆகையால், மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் முதிர்ச்சியுடனும் முடிவெடுத்த அவரது மனைவி அவரை விவாகரத்து செய்தார். மேலும் தனது கணவன் தன் காதலியை திருமணம் செய்துகொள்ளவும் அவருக்கு உதவினார்.” என்று வழக்கறிஞர் கூறினார்.

ட்விட்டரில் (Twitter) பலர் அந்தப் பெண்ணின் தியாகத்தை பாராட்டியதோடு, அத்தகைய நிலைக்கு அவரைத் தள்ளிய அவர் கணவரை விமர்சித்தனர்.

ஒரு பயனர், “மிகவும் உணர்ச்சியற்ற மனிதர் .. அவருக்கு ஒரு காதலி இருந்தால் அவர் ஏன் மற்றொரு பெண்ணை மணந்தார் ..? அந்த காதலி விரைவில் அவரை வெளியேற்ற வேண்டும் ... அந்த தைரியமான பெண்ணுக்கு விரைவில் ஒரு அன்பான, அக்கறை காட்டும் கணவர் கிடைப்பார் என்று நம்புகிறேன்" என்று எழுதினார்.

ALSO READ: காதல் தோல்வியால் இவர் தாடி வைக்கவில்லை, தன்னைத்தானே மணந்து கொண்டார்: Viral ஆகும் pics!!

Trending News