சமந்தா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்த இவர் ஐதராபாத்தில் குடியேறி உள்ளார். 

Last Updated : Mar 29, 2018, 03:43 PM IST
சமந்தா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!  title=

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்த இவர் ஐதராபாத்தில் குடியேறி உள்ளார். 

நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதுடன் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடிகை சமந்தா அவர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வை நடத்தி வருகிறார். 

இதற்காக சமந்தாவிற்கு விளம்பர தூதுவர் பொறுப்பு கொடுக்கப்பட்டு தெலுங்கானா அரசு சார்பில் அதிக சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சைகள் வெளியானது. மேலும் சமூக நலம் சார்ந்து நல்ல நோக்கத்துக்காக செய்யப்படும் இந்த வேலைக்காக சமந்தா அதிக பணம் வாங்கியது முறையல்ல என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் இதற்கு அம்மாநில அரசு, விளக்கம் அளித்து உள்ளார். அதில், மந்தா கைத்தறி துணிகளுக்காக தானாக முன்வந்து பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நடிகை சமந்தா பணம் எதுவும் வாங்கவில்லை. இந்த பணியை செய்ய அவராகவே முன்வந்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 

இவ்வாறு கூறியுள்ளது.

Trending News